மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் அமுதவாணன். அதோடு சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது பில்லா பாண்டி உள்பட இரண்டு படங்களில் காமெடி ரோலில் நடிப்பவர், நாய் சேகர் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி அமுதவாணன் கூறுகையில், ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் என்னை நாயகனாக நடிக்க அழைத்தபோது நான் மறுத்தேன். ஆனால் நான்கு பேரில் ஒருவராகத்தான் நடிக்க வேண்டும் என்று சொன்னதால் நடித்தேன். காரணம் எனக்கு ஆக்சன், ரொமான்சை விட காமெடிதான் நன்றாக வரும். அதனால் நான் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதே இல்லை. எனக்கு செட்டாகக்கூடிய காமெடி ரோலில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
அதனால் தற்போது ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி மற்றும் இன்னொரு புதுமுக ஹீரோ நடிக்கும் படத்திலும் காமெடியனாக நடிக்கிறேன். ஆனால் நாய் சேகர் என்றொரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இது காமெடி படம் என்பதால் நடிக்கிறேன் என்று கூறும் அமுதவாணன், எதிர்காலத்தில் சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே நல்லதொரு காமெடியனாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.