டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு |
மலையாள சினிமாவில் தனது குறும்புத்தனமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருந்தவர் நஸ்ரியா. அதையடுத்து நேரம் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். முதல் படமே வெற்றியாக அமைந்ததால் அடுத்தபடியாக ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என சில படங்களில் நடித்தபடி வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார்.
ஆனால், அதையடுத்து மலையாள நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்டதால் அவரது கலைப்பயணத்திற்கு வேகத்தடை ஏற்பட்டது. இருப்பினும், தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடங்க தயாராகி விட்டார் நஸ்ரியா. அந்த வகையில், பிரபல மலையாள பெண் இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் பிருத்விராஜூடன் நடிக்கயிருக்கும் நஸ்ரியா, அதையடுத்து துல்கர்சல்மான் நடிப்பில் தமிழ், மலையாளத்தில் உருவாகும் இன்னொரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆக, திருமணத்திற்கு பிறகும் பிருத்விராஜ், துல்கர் சல்மான் என முன்னணி ஹீரோக்களுடன் மறுபிரவேசம் செய்கிறார் நஸ்ரியா.