டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை போராட்டம் நடத்திய அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமலை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் அனிதாவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மனது வேதனை அளிக்கிறது. மாணவி மரணம் துரதிருஷ்டமானது. மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.