இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ஸ்பைடர். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என்றபோதும், ஒரேயொரு டூயட் பாடல் மட்டும் பேலன்ஸ் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பாடலை படமாக்க ரோமானியா நாட்டில் முகாமிட்டது ஸ்பைடர் டீம். மகேஷ்பாபு-ரகுல்பிரித்சிங் நடித்த அந்த டூயட் பாடல் காட்சி நேற்றோடு படமாக்கப்பட்டு பூசணிக்காய் உடைத்து விட்டனர்.
செப்டம்பர் 29-ந்தேதி திரைக்கு வரும் ஸ்பைடர் படம் மூலம் முதன்முதலாக மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாவதால், அவரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. அன்று முதல் திரையரங்குகளில் ஸ்பைடர் டிரைலரும் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து படத்தின் ரிலீசுக்கு முன்னதாக ஐதராபாத்திலும் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெறுகிறதாம்.