ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அதிரடியான வில்லனாக நடித்தவர் ராணா. அதையடுத்து நேனே ராஜூ நேனே மந்திரி என்ற அரசியல் படத்தில் நடித்தார். அந்த படம் தெலுங்கில் வெளியாகி விட்டது. நான் ஆணையிட்டால் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகயிருந்த அந்த படம் விவேகம் படத்தினால் பின்வாங்கி விட்டது.
மேலும், நேனே ராஜூ நேனே மந்திரி படம் பல வருடங்களுக்கு பிறகு ராணாவுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் ஜெமினி டிவியில் நம்பர் ஒன் யார் என்றொரு அரட்டை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் ராணா தொகுத்து வழங்கும் ஸ்டைல் நேயர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறதாம். அதோடு, அந்த நிகழ்ச்சியின் டிஆர்பியும் உயர்ந்து நிற்கிறதாம்.