வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கேரள முதல்வர் பினராய் விஜயனை கமல் சந்தித்து பேசினார். முதல்வர் இல்லத்தில் கமலுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.
சமீபகாலமாக கமல் டுவிட்டர் மூலம் அரசியல் தொடர்பானை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று கூறியது ஆளும் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. அவர் அரசியலுக்கு வர அச்சாரமாக பேசி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.
சில தினங்களுக்கு முன்னர் கோவையில் திருமண விழாவில் பேசியபோது கூட,"அரசியல் சூழலை, இப்படியே விட்டு வைக்காமல், மாற்ற வேண்டியது, நம் கடமை. கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன்" என்றார்.
இந்நிலையில் கமல் நேற்று இரவு கேரளா சென்றார். இன்று(செப்., 1) மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். தொடர்ந்து கமலுக்கு முதல்வர் வீட்டிலேயே ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.
கமல் தெரிவித்து வரும் கருத்துக்கள் இடதுசாரி சிந்தனகள் கொண்டதாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த சந்திப்பில் அரசியல் ஏதும் பேசப்பட்டடதா ? இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு யூகங்கள் கிளப்பியுள்ளன.