டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சினிமா வரலாற்றை தொகுத்து புத்தகமாக எழுதினால் அதில் இயக்குனர் ஹரிஹரனுக்கு தனியாக ஒரு வால்யூமே போட வேண்டும். அந்த அளவுக்கு மலையாள சினிமாவுடன் இரண்டற கலந்துவிட்டவர் ஹரிஹரன். கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் பிதாமகனாக கருதப்படும் எம்.டி.வாசுதேவ நாயர் எழுதிய கதையான 'பழசிராஜா'வை டைரக்டர் ஹரிஹரன் இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
1965ல் மலையாளம் சினிமாவில் நுழைந்தாலும் ஹரிஹரன் இயக்கிய முதல் படம் 1974ல் தான் வெளியானது. மூன்று முறை தேசிய விருதுகளையும், ஆறுமுறை கேரளா அரசின் விருதுகளையும் வென்றுள்ள இவர், மலையாள சினிமாவில் மிக அற்புதமான படைப்புகளை கொடுத்துள்ளார். இயக்குனர் ஹரிஹரன் மலையாள சினிமாவில் ஐம்பது வருடங்களை நிறைவுசெய்ததை பாராட்டி கோழிக்கோட்டில் அவருக்கு விழா எடுக்கப்பட்டது. இந்தவிழாவில் மம்முட்டி, இசைஞானி இளையராஜா, இயக்குனர் ஷ்யாம் பெனகல், இயக்குனரும் கதாசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர், ரசூல் பூக்குட்டி, மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் கலந்துகொண்டு ஹரிஹரனை வாழ்த்தினார்கள்.