தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
7 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் களவாணி, பசங்க படத்தில் பளிச்சென்று தெரிந்த விமலை சோலோ ஹீரோவாக்கிய படம். இயக்குனர் சற்குணத்தின் முதல் படம். ஓவியா அறிமுகமான படம். முதன் முறையாக தஞ்சை பகுதி மண்வாசனை கதையாக வெளிவந்தது.
விமலுடன் ஓவியா, சரண்யா, இளரவசு, கஞ்சா கருப்பு நடித்திருந்தனர். எஸ்.எஸ்.குமரன் இசை அமைத்திருந்தார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. விமலுடன் சூரி, கஞ்சா கருப்பும் மீண்டும் நடிக்கிறார்கள். சற்குணம் இயக்குகிறார். இந்த தகவலை விமல் நேற்று தனது பிறந்த நாளையட்டி வெளியிட்டார்.
தற்போது அவர் மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து வருகிறார். இதனை பூபதி பாண்டியன் இயக்குகிறார். இது விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படம் முடிந்ததும் வெற்றிவேல் படத்தின் இயக்குனர் வசந்தமணி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.