பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை: நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை பெப்சி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ‛‛பெப்சி அமைப்பின் சார்பில் சென்னை வடபழனியில் பொதுக்குழு கூட்டம் ஆர்.கே.செல்வணி தலைமையில் நடந்தது. பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் செல்வமணி அளித்த பேட்டி,
பெப்சி அமைப்புக்கு எதிராக மற்றொரு அமைப்பை உருவாக்க தயாரிப்பாளர் சங்கம் முயற்சிக்கிறது. தயாரி்ப்பாளர் சங்கத்தினரோடு இதுவரை இணக்கமாகவே செயல்பட்டு வருகிறோம். சினிமா தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கின்றனர். அந்த வகையில்,தமிழ் திரைத்துறை நலனுக்காகவே பெப்சி தொழிலாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.
எனவே எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றார். போராட்ட அறிவிப்பால் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் காலா, விஜய் நிடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பட பிடிப்புகள் பாதிப்பாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.