வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தற்போது, பாட்ஷாஹோ படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் அஜய் தேவ்கன். பாட்ஷாஹோ படம் வரும் செப்டம்பர் முதல் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனது வருங்கால படங்கள் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், நான் தானஜி, கேப்சுல் கில் படங்களை தயாரித்து வருகிறேன். சஞ்சய் தத்துடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். பரன் அக்தருடன் படம் ஒன்று பண்ண உள்ளேன். ஷிவாய் படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷூவல் எபெக்ட்ஸ், அப்படத்தில் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாக தானஜி படத்தில் செய்ய உள்ளோம்.
இது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தை பற்றி சொல்லும் படம். அனேகமாக இது அனைத்து படங்களின் தாயாக இருக்கும். ஏன், பாகுபலியின் பிரம்மாண்டத்தை மிஞ்சும் விதமாக இருக்கும் என நினைக்கிறேன். தற்போது இப்படத்தின் பிரிபுரோடெக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறோம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளோம். பேட்டில் ஆப் ஷர்காரி படம் பற்றி வெகு காலத்திற்கு முன்பே அறிவித்தேன். ஆனால் அப்படத்தின் வேலைகள் துவங்கப்பட இன்னும் 2 இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார்.