தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை குற்றவாளி பல்சர் சுனில்.. இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் போலீசார் நடிகர் திலீப்பை இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்தனர். ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு இந்த பல்சர் சுனில் அழைத்து வரப்படும்போதெல்லாம் மீடியாக்களின் முன் இந்த கேஸ் தொடர்பாக ஏதாவது பேசிவிட்டு போவது வழக்கம். அப்படித்தான் இந்த கேஸில் மேடத்துக்கும் தொடர்பு உண்டு என கடந்த முறை கூறியிருந்தார் சுனில்..
மேடம் என்றால் அது திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் தான் என அன்றிலிருந்தே யூகங்கள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன. இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பதுவதற்காக மீண்டும் அழைத்து வரப்பட்ட சுனிலிடம் மீடியாவினர் யார் அந்த மேடம் என கேட்டனர்... அதற்கு “காவ்யா தான் மேடம் என ஏற்கனவே சொல்லியிருந்தேனே.. திரும்ப திரும்ப ஏன் கேட்கிறீர்கள்” என பதில் கூறியபடியே சென்றார்.
ஏற்கனவே காவ்யா மாதவனிடம் போலீஸ் விசாரணை நடத்தியதும், அதில் முதலில் பல்சர் சுனில் யாரென தெரியாது என மறுத்த காவ்யா மாதவன், பின்னர் அவர் தன்னிடம் ட்ரைவராக இருந்தவன் என்பதை ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.