ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயரெடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. தற்போது இவர் பாத்சாகோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் அஜய் தேவ்கன், இலியானா, இஷா குப்தா, வித்யூத் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். செப்., 1-ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் புரொமோசன் வேலைகளில் பிஸியாக உள்ளார். அப்படி அவர் புரொமோஷன் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது, தான் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இதுப்பற்றி இம்ரான் மேலும் கூறுகையில், ஒருகாலத்தில் நான் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வந்தேன். ஒரு நேரம் கூட வீட்டில் உட்காரமால் கதையை கூட பார்க்காமல் வர வாய்ப்பையும் எல்லாம் பயன்படுத்தினேன். ஆனால் இப்போது அப்படியல்ல, நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இதற்காக நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி வருகிறேன் என்கிறார்.