பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்ட ரகுல் பிரீத் சிங், அடுத்து தமிழில் முன்னணி நடிகையாகும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் தமிழில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். அடுத்தபடியாக விஜய், அஜீத் என முன்வரிசை ஹீரோக்களுடன் ஜோடி சேருவதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார் ராகுல்பிரீத் சிங்.
இதனிடையே ஸ்பைடர் படத்தில் நடிக்க அழைத்தபோது டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ஹீரோ மகேஷ்பாபு என்றதும் கதையே கேட்காமல் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் ரகுல். இகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறுகையில்,
மகேஷ்பாபு நடிக்கிற எல்லா படங்களுமே தரமானவைதான். அவர் ஆக்சன் கலந்த தரமான கதைகளாகத்தான் தேர்வு செய்து நடிப்பார். அதேபோல்தான் ஏ.ஆர்.முருகதாசும், பெரும்பாலும் சமூக நோக்கமுள்ள நல்ல கதைகளாகத்தான் இதுவரை இயக்கியிருக்கிறார். அதனால்தான் ஸ்பைடர் படவாய்ப்பு என்றதுமே எனக்கு கதை கேட்க தோன்றவில்லை. கண்டிப்பாக நல்ல படமாகத்தான் இருக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் நடித்தேன் என்றார்.