'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேரடி சம்பந்தம் உள்ளதாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அதேசமயம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு இல்லாவிட்டாலும் கூட மலையாள சினிமாவின் காமெடி நடிகரான அஜூ வர்கீஸும் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டினார்.
காரணம் இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்ட அஜூ வர்கீஸ், அதில் தேவையில்லாமல் நடிகையின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அது அப்போதே சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. உடனே மன்னிப்பு கேட்டு அதை நீக்கியும் விட்டார் அஜூ வர்கீஸ்.
ஆனால் இது தொடர்பாக கிரீஷ்பாபு என்பவர் ஆக-2ஆம் தேதியே போலீஸில் புகார் அளித்தார். இதனால் அஜூ வர்கீஸ் கலமசேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் விசாரிக்கப்பட்டார்.. இந்தநிலையில் நேற்று இந்த புகாரின் அடிப்படையில் அஜூ வர்கீஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவே, அவரை ஜாமீனில் விடுதலை செய்தது நீதிமன்றம்.
அதுமட்டுமல்ல “காமெடி நடிகர் அஜூ வர்கீஸ் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லியிருப்பாரே தவிர அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்க வாய்ப்பில்லை.. அவரும் என் நண்பர் தான்” என சம்பந்தப்பட்ட நடிகையிடம் இருந்து அவரது கையெழுத்துடன் அபிடவிட் ஒன்றையும் வாங்கிவந்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அஜூ வர்கீஸ், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
ஆனால் அஜூ வர்கீஸ் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாம். நடிகையிடம் இருந்து அவர் மன்னிப்பு கடிதம் வாங்கி வந்தது விஷயம் அல்ல.. அவர் பாதிப்புக்குள்ளானவரின் பெயரை பயன்படுத்தினார் அல்லவா, அதற்காகத்தான் இந்த வழக்கு.. இதை சட்டப்படி அவர் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என கூறிவிட்டதாம் நீதிமன்றம்..