'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் மற்றும் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி அவரை வானளாக புகழ்ந்து தள்ளும் தலைவன் வருகிறான் என்ற விஷான் ஆன்தம் வெளியிட்டனர். இந்த ஆல்பத்துக்கு இஷான் தேவ் இசை அமைத்து பாடியுள்ளார். முருகன் மந்திரம் பாடல் எழுதியுள்ளார். பத்திரிக்கையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கி உள்ளார். ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் வருமாறு:
நேசம் கொண்ட தலைவன் வந்தான்
நெஞ்சே நிமிர்ந்து நில்லு
நெருப்பைபோல தீமை எதிர்க்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதி
பாரம் எல்லாம் தூரம் தள்ளி
என்னாளுமே நல்ல சேதி சொல்லு
ஒரு தலைவன் வருகிறான்
புது தலைவன் வருகிறான்
செஞ்ச தப்பை தட்டிக் கேட்கும்
ஆம்பள இவன்தானே
திமிரு பிடிச்ச ஊருக்கு பிடிச்ச
திமிரே இவன்தானே...
கூட்டம் கூட்டி பிரச்சினை பண்ணினா
ஒதுங்கிட மாட்டனே...
மூஞ்சு முன்தான் பேசுவான்
புறங்குத்த மாட்டானே...
இது புதியபடை
இது இளையபடை
இது புரட்சிப்படை
இவன் வந்த பின்தான் மாற்றம் மாற்றம்
வருங்காலம் என்றுமே இவனை போற்றும் போற்றும்.
இவ்வாறு பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
விஷால் மெல்ல மெல்ல அரசியல் களம் நோக்கி நகர்வதையே இந்த ஆல்பம் சுட்டிக் காட்டுகிறது.