தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்லி இயக்கத்தில் விஜய், நடிக்கும் 'மெர்சல்' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் 'மெர்சல்' எமோஜி ஒன்றை ட்விட்டரில் அறிமுகம் செய்தனர். இது தென்னிந்தியாவிலேயே ஒரு படத்திற்காக செய்யப்படும் முதல் முயற்சி என்று அறிவித்தனர்.
அதேபோல், இப்போது 'மெர்சல்' படத்தலைப்பிற்கு 'டிரேட் மார்க்' சான்றிதழ் வாங்கியுள்ளனர். தென்னிந்திய அளவில் ஒரு படத்தின் தலைப்பிற்காக டிரேட் மார்க் வாங்கியிருப்பது இதுவே முதல்முறை.
படத்தின் தலைப்புக்கு ஏன் டிரேட் மார்க் வாங்க வேண்டும்? வணிக ரீதியாக பயன்படுத்தும் பொருட்களில் மெர்சல் என்ற பெயரை அச்சிட வேண்டும் என்றால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே அவசர அவசரமாக டிரேட் மார்க் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.