‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள நடிகர் திலீப், நடிகையின் விவாகாரத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளதாக கேரள விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியான ஒரு ரிப்போர்ட் சொல்லுகிறதாம். அதற்காக திலீப் கைது காரணமாக மக்கள் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக தியேட்டர்களுக்கு வர மறுக்கிறார்களோ என நினைத்துவிட வேண்டாம்.. கடந்த இரண்டு மாதங்களாக மலையாளத்தில் மிகப்பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது ஒரு காரணம்.
இன்னொரு பக்கம் திரையுலகில் நிகழ்ந்துள்ள இந்த நடிகர்-நடிகை கடத்தல்-கைது விவகாரம் பொதுவான ரசிகர்களிடத்தில் “என்னடா இந்த சினிமாக்காரங்க..” என்கிற விதமாக சன்னமான ஒரு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது தான் கூட்டம் குறைந்ததற்கு முக்கிய காரணமாம். வரும் ஓணம் பண்டிகைக்கு மோகன்லால், மம்முட்டி, நிவின்பாலி, பிருத்விராஜ் என பெரிய நடிகரின் படங்கள் வெளியாக இருப்பதால், அவைதான் ரசிகர்களின் மனநிலையை மாற்றி அவர்களை திரையரங்கிற்கு அழைத்து வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் கேரள திரைப்பட வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும்.