தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் அவ்வப்போது சீரான இடைவெளியில் வெளியாகிவந்த மம்முட்டியின் சி.பி.ஐ பட வரிசைகளை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு சிறிய முன்னோட்டம்.. கடந்த 25 வருடங்களில் இதுவரை இந்திய மொழிகளில் ஒருபடம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் மட்டும்தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி.
அதை தொடர்ந்து ஜகார்த்தா, சேதுராமையர் சி.பி.ஐ, நேரறியான் சி.பி.ஐ என நான்கு பாகங்கள் வெளியாகின. சரி விஷயத்துக்கு வருவோம்.. நீண்ட நாட்களாக இந்த சி.பி.ஐ டைரி குறிப்பு படத்தின் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி, பின் அப்படியே அமுங்கிவிடும். இந்நிலையில், இந்த நான்கு பாகங்களை இயக்கிய இயக்குனர் மதுவும் கதாசிரியர் எஸ்.என்.சுவாமியும்.. இந்த ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் 2018ல் நிச்சயமாக தொடங்க இருக்கிறது என கூறியுள்ளார் எஸ்.என்.சுவாமி.
இதிலும் சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் 5வது முறையாக மம்முட்டியே நடிக்க இருக்கிறார்.. இந்த 5ஆம் பாகத்தின் கதையும் காட்சியமைப்பும் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாதபடி இருக்கும் என கூறியுள்ளார் எஸ்.என்.சுவாமி. மேலும் இந்தப்படம் வழக்கம்போல கேரளாவில் அல்லாமல் வெளி மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி ஹைடெக் டெக்னாலஜி அம்சங்களுடன் உருவாக இருக்கிறதாம்.