பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மலையாள இளம் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆசிப் அலி. நம்ம ஊரில் விஷ்ணு, அதர்வா ரேங்கில் மலையாளத்தில் இவரை குறிப்பிடலாம். மினிமம் கியாரண்டி படங்களை தருவதில் வல்லவரான இவரது தம்பி அஸ்கர் அலியும், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இவரது தம்பி நடித்த 'ஹனி பீ-2.5' என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த டைட்டில் கூட ஆசிப் அலி நடித்த 'ஹனி பீ-2' படத்தில் இருந்து கிட்டத்தட்ட காப்பியடித்ததைப்போலவே பப்ளிசிட்டிக்காக வைக்கப்பட்டது.
இப்போது அஸ்கர் அலி 'காமுகி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக 'இதிகாசா' என்கிற படத்தை இயக்கிய பினு என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார் '8 தோட்டாக்கள்' நாயகி அபர்ணா பாலமுரளி.. இவர் ஏற்கனவே ஆசிப் அலியுடன் சமீபத்தில் வெளியான 'சண்டே ஹாலிடே', 'திருச்சிவப்பேரூர் கிளிப்தம்' ஆகிய படங்களில் ஜோடியாக தொடர்ந்து நடித்திருந்தார். இவரை தனது தம்பியின் படத்துக்கு கதாநாயகியாக சிபாரிசு செய்தவரும் ஆசிப் அலி தானாம்.