மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான், சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கும் படம் கேதர்நாத். அபிஷேக் கபூர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். 2013-ம் ஆண்டு உத்தர்கண்ட்டில் நிகழ்ந்த மழை வெள்ளத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை கேதர்நாத்தில் நடந்தது. தொடர்ந்து பிரீ-புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வந்த நிலையில் வருகிற செப்., 3-ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இதுப்பற்றி கேதர்நாத் படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறுகையில், "கேதர்நாத் படப்பிடிப்பு செப்.,3 முதல் ஆரம்பமாகிறது. கேதர்நாத்தின் அழகு, வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு போன்ற விஷயங்களை மிகவும் உணர்வுப்பூர்வமாக சொல்ல இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
கேதர்நாத் படம் அடுத்தாண்டு கோடையில் ரிலீஸாக உள்ளது.