தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி-2 படத்தை அடுத்து தனது அடுத்த படம் குறித்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை ராஜமவுலி. அதற்கான கதை தயாராகிக்கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் தயாராகி வந்தபோது அவர் எந்த தெலுங்கு பட விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் தற்போது ஓய்வாக இருப்பதால் அவ்வப்போது திரைப்படங்களின் ஆடியோ விழாக்கள் மற்றும் பட பூஜைகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் சிரஞ்சீவியின் பிறந்த நாளின்போது அவர் நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு மோஷன் போஸ்டரை வெயிட்டார். அதையடுத்து நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற நாகசைதன்யாவின் யுத்தம் சரணம் படத்தின் ஆடியோ விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராஜமவுலி.
அப்போது அந்த படத்தின் டிரைலர் தன்னை இம்ரப்ஸ் செய்து விட்டதாக கூறிய அவர், டிரைலரைப் பார்க்கும்போதே இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதை உறுதி செய்ய முடிகிறது என்றொரு பாசிட்டிவான கருத்தினை சொல்லி படக்குழுவை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.