பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய சண்டை இயக்குனர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டவிதம் சங்க உறுப்பினர்களிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தென்னிந்திய சண்டை கலைஞர்கள் சங்கம் என்று பெயர் இருந்தாலும் அது தமிழ் சண்டை கலைஞர்கள் சங்கம் தான். அது செயல்படுவதும் தமிழ்நாட்டில் தான். மற்ற மொழி கலைஞர்களை விட தமிழ் கலைஞர்களுக்குத் தான் சங்கத்தின் மீது அக்கறையும் மதிப்பும் இருந்திருக்க வேண்டும்.
விழாவுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் எல்லோருக்கும் முன்னதாக வந்து விட்டனர். தமிழ் நடிகர்கள் பில்டப்போடு வந்தார்கள். மேடையில் விழாவை தொகுத்து வழங்கியவர்கள் கேட்டுக் கொண்டபடி தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.பாலகிருஷ்ணா ஒரு சண்டைக் காட்சியை நடத்திக் காட்டினார்.
மோகன்லால் ஒரு டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்தார். இதே சண்டை காட்சி கோரிக்கையை கார்த்தியிடம் சொன்னபோது அவர் செய்ய மறுத்துவிட்டார். சூர்யாவிடம் "ஓங்கியடிச்சா ஒண்டற டன் வெயிட்" வசனத்தை பேசச் சொன்னபோது மறுத்து விட்டார்.
மோகன்லால் மேடையேறி பேசத் தயாரானபோது ரஜினி உள்ளே என்ட்ரி ஆனார். அரங்கம் ஆரவாரம் செய்தது. மோகன்லால் செய்வதறியாது மேடையிலேயே நின்று கொண்டிருந்தார். ஒரு முன்னணி கலைஞனுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்று எங்களுக்கே மனக் கஷ்டமாக இருந்தது.
சண்டை கலைஞர்களாலேயே முன்னுக்கு வந்த கமல், விஜய், அஜீத் ஆகியோர் விழாவுக்கே வரவில்லை. இந்த விழாவில் முன்னணி நடிகர்கள் மூலம் நிறைய நிதி திரளும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் சிவகுமார் மட்டுமே தன் குடும்பத்தின் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிதி கொடுத்தார். என்றார் அவர்.