பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நேற்றுமுன் தினம் சென்னையில் ஸ்டண்ட் கலைஞர்கள் தங்களது சங்கத்தின் பொன் விழா ஆண்டை நேரு ஸ்டேடியத்தில் வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள்.. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், பாலகிருஷ்ணா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். இந்த முன்னணி நட்சத்திரங்களின் இமேஜை ரசிகர்களிடம் உயர்த்தியதில் சண்டைகாட்சிகளுக்கும் அதை வடிவமைத்த சண்டை கலைஞர்களுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அதனால் தான் ரஜினி, மோகன்லால் இருவருமே இந்த விழாவில் தவறாமல் கலந்துகொண்டனர். குறிப்பாக தற்போது 'ஒடியன்' படப்பிடிப்பிற்காக வாரணாசியில் முகாமிட்டிருந்த மோகன்லால் அங்கிருந்தே நேராக வந்து இந்த விழாவில் கலந்துகொண்டார்.. மலையாள சினிமாவை பொறுத்தவரை, சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதில் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழ் கலைஞர்களைத்தான் சார்ந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது,
அதுமட்டுமல்ல மோகன்லால் நடித்த 'புலி முருகன்', அடுத்து வெளியாக இருக்கும் 'வில்லன்', தற்போது உருவாகி வரும் 'ஒடியன்' ஆகிய படங்களில் பிரதானமாக பணியாற்றியுள்ள பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர்களின் அன்புக்கட்டளையை தட்ட முடியாமல், மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த விழாவில் பங்கேற்றார் மோகன்லால்.