ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. வரலாற்றுக் கதையுடன் கூடிய ஒரு ஃபேன்டஸி படமாக வெளிவந்த இந்தப் படம் சில வெளியீட்டுச் சிக்கல்களாலும், சரியான விளம்பரம் இல்லாததாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க ஃபேன்டஸி படமாக அமைந்தது.
'பாகுபலி' அளவிற்கு செலவி செய்யாமல் குறைந்த செலவில் பிரமிப்பூட்டும் விதத்தில் அந்தப் படத்தை இயக்கியிருந்தார் செல்வராகவன். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் தொடர்ந்து சவால் விடும் வகையில் பட ஃபேன்டஸி படங்கள் வெளிவந்திருக்கும்.
சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் டிவிட்டரில் 'சாட்' செய்த செல்வராகவனிடம் ஒரு ரசிகர் மற்றுமொரு வரலாற்றுப் படம் இயக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டதற்கு 'சோழன் பயணம் தொடரும்' என செல்வராகவன் பதிலளித்திருந்தார்.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் சோழர்களைப் பற்றிய ஒரு பகுதியும் இருந்தது. கற்பனையான கதையாக இருந்தாலும் அவர் அதைக் கையாண்ட விதம் சிறப்பாக இருந்ததாக இன்றும் பலர் பாராட்டி வருகிறார்கள். செல்வராகவன் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அவர் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கலாம் என்று தெரிகிறது. இதற்கான கதையையும் அவர் ஏற்கெனவே எழுதி முடித்துவிட்டதாகவும் ஒரு முறை சொல்லியுள்ளார்.