அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சின்னத்திரையின் சகலகலாவல்லி என்று நிரஞ்சினியை தாராளமாக குறிப்பிடலாம். விமான பணிப்பெண், அழகுலை நிபுணர், ஆடை அலங்கார நிபுணர், மாடல் அழகி, நடிகை என இப்படி பல முகங்கள் அவருக்கு. விரைவில் இயக்குனர் என்ற புதிய முகத்தையும் காட்ட இருக்கிறார்.
அழகி சீரியலில் அறிமுகமான நிரஞ்சனி, அக்கா, பிரியமானவள் தொடர்களில் நடித்தார். தற்போது வாணி ராணி, நீலி தொடர்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வரும் சினிமா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறார். சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தவர் இப்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆனாலும் நிரஞ்சனிக்கு இயக்குனராகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. "சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது என்னோட நீண்ட நாள் கனவு. விஷ்காம் படிக்கும்போது சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய தெலுங்கு படத்தில் துணை இயக்குனராக வேலை செய்தேன். கைவசம் நிறைய ஸ்கிரிப்டுகள் இருக்கிறது. இப்போது சின்னத்திரை, சினிமாவில் நடிப்பில் பிசியாக இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது லைட்ஸ் ஆன்... கேமரா... ரெடி...ஆக்ஷன் சொல்வேன்" என்கிறார் நிரஞ்சனி.