டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எல்லா திரையுலகிலும் அறிவுஜீவி என தங்களை நினைத்துக்கொள்ளும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. தாங்கள் உருவாக்குவதுதான் கதை, எடுப்பதுதான் படம் என்கிற கொள்கை உடையவர்கள்.. மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரியும் அப்படிப்பட்ட ஒருவர் தான். சில நேரம் 'டபுள் பேரல்' போல ரசிகர்களை சோதிக்கும் படங்களை கொடுத்த இவர், 'அங்கமாலி டைரீஸ்' போன்ற, ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்களும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களும் கூட பாராட்டிய படத்தையும் தர தவறியதில்லை.
சில மாதங்களுக்கு முன் இவரது டைரக்சனில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் புதிய முயற்சியாக, கதாநாயகன்-நாயகி என 84 புதுமுகங்களை வைத்து இயக்கி புதிய சாதனை செய்திருந்தார். இப்போது தனது அடுத்த படமான 'ஈ ம யூ' (ஈஷோ-மரியம்-யூசுப்) என்கிற படத்திலும் இன்னொரு சாதனையை செய்துள்ளார். ஆம்.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை ஆரம்பித்த லிஜோ ஜோஸ், வெறும் பதினெட்டே நாட்களில் முழுப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.. கடலோர கிராமம் ஒன்றின் பின்னணியில் நிகழும் இந்த கதையில் செம்பான் வினோத், விநாயகன், இயக்குனர் திலீஷ் போத்தன் ஆகியோர் டைட்டில் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.