ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி சண்டை இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் 50வது பொன்விழா நேற்று இரவு நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினி பேசியதாவது:
சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவிற்கு சண்டை கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் இவருக்கும். ஆக்ஷன் படங்களைத்தான் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். நல்ல வசூலும் அதில்தான் கிடைக்கும். சினிமா உலகை ஆள்வது சண்டை கலைஞர்கள்தான். உடம்பையே மூலதனமாக கொண்டு உயிரை பயணம் வைத்து வியர்வையோடு ரத்தத்தையும் சிந்துகிறவர்கள் சண்டை கலைஞர்கள்.
நான் இப்போது 2.ஓ படத்தில் வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் பணியாற்றி வருகிறேன். அவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்கிறது. அந்த வசதியை நம் சண்டை கலைஞர்களுக்கும் கொடுத்தால் அவர்களாலும் உலக அளவில் சாதிக்க முடியும். சண்டை கலைஞர்கள், தங்கள் குடும்பத்தை, குழந்தைகளை கவனிக்க வேண்டும். அவர்களை மனதில் வைத்து உழைக்க வேண்டும். என்ன உதவி வேண்டுமானாலும் என்கிட்ட வாங்க. உங்களுக்காக இந்த ரஜினிகாந்த் கதவு எப்போதும் திறந்திருக்கும்.
இவ்வாறு ரஜினி பேசினார். விழாவில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா, சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, இயக்குனர் ஷங்கர், கே.பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த சண்டை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.