அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சின்ன வயசுல இருந்தே சினிமாதான் எனக்கு கனவு. சினிமாவுக்குள் நாமும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்துச்சு. அதுவும் நடிப்பிலதான் நம்ம பங்களிப்பு இருக்கும்னு நினைச்சேன். அந்த கனவு தரமணி படம் மூலம் நனவாச்சு என சிலிர்க்கிறார் ஹீரோ வசந்த்ரவி. சமீபத்தில் ராம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இவரது பிரபுநாத் கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இத்தனைக்கும் இது, இவர் நடித்த முதல்படம். நெல்லையை சேர்ந்தவர். முதல் படம் மாதிரியே தெரியலயே. அந்த அளவுக்கு எக்சலன்டா நடிச்சிருக்கீங்க என ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் பாராட்டு மழையில் நனைந்த மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் வசந்த்ரவி. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவரை சந்தித்தோம்.
கனவு நனவான பிளாஷ்பேக்?
ெஹல்த்கேர் மேனேஜர் தொடர்பான படிப்பை படித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் வேலை செய்தேன். இருந்தாலும் சினிமா ஆசை விடவில்லை. மும்பை நடிகர் அனுபம்கெரின் நடிப்பு பயிற்சி பள்ளியில் 6 மாதம் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பிறகு லண்டன் சென்று அப்படியே ராம் மூலம் நடிகனாகிவிட்டேன்.
உங்களுக்கு எப்படி ராம்...?
அவர் தங்கமீன்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, ஒரு நண்பர் மூலம் அறிமுகமானேன். பிறகு அடிக்கடி அவரிடம் பேசுவேன். திடீரென்று ஒரு நாள் என்னை கூப்பிட்டார். ஒரு லைன் கதை சொன்னார். அதை மூன்று ஆண்டுகளாக டெவலப் செய்தார். ஷூட்டிங் நடந்தது என்னவோ 80 நாட்கள் தான். ஆனால் படத்திற்காக 3 ஆண்டுகளாக தவம் மாதிரி இருந்தேன். அதுதான் இந்த அளவுக்கு ரீச் ஆயிருக்கு.
இந்த படத்திற்காக எல்லாத்தையும் கற்றுக்கொண்டீர்களாமே?
(சிரிக்கிறார்) உண்மைதான். கடலுல குதிக்கிற சீன்க்காக 3 மாதம் நீச்சல் கற்றுக்கொண்டேன். முதல் சீனே சிகரெட் அடிக்கிறது. அதையும் அடித்தேன். படத்திலகூட ஆண்ட்ரியா உங்களுக்கு சிகரெட் அடிக்க தெரியல என்பார். சிகரெட் அடிக்க தெரியாது என்பதுகூட ஹியூமரா டைரக்டர் காட்சிப்படுத்தினாரு. அதுபோல தண்ணி அடிக்கிற பழக்கமும் கிடையாது. படத்திற்காக உண்மையாகவே அழகம்பெருமாளுடன் தண்ணீ அடிச்சு நடிச்சேன். காட்சி ரொம்ப இயல்பா வந்துச்சு.
தங்கமீன்கள் மாதிரி இந்த படமும் தேசிய விருது பெறும்னு பேச்சு அடிபடுகிறதே?
தங்கமீன்கள் படம் எடுக்கும்போது விருதுக்காக எடுக்கவில்லை என்று ராம் சொன்னார். அதேமாதிரிதான் இந்த படமும். விருது கிடைத்தால் முதல்ல சந்தோஷப்படுற ஆள் நான்தான்.
ரஜினிகாந்த் பாராட்டினாராமே?
ஆமாம். திடீரென எனக்கு போனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் ரஜினிகாந்த். நடிப்பு, படம் பற்றி ரொம்ப நேரம் பேசினார். உங்ளுக்கு முதல் படம் மாதிரியே தெரியலைனு வாழ்த்தினார். இதேபோல் இயக்குனர்கள் ஹரி, தரணி மற்றும் வைரமுத்து உள்ளிட்டோரும் பாராட்டினாங்க.
அடுத்த படம்?
பேசிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கைக்காக நடிக்காமல் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கலாம் என இருக்கிறேன். அதற்கு முன்னாடி மக்களோடு தரமணி பட வெற்றியை கொண்டாடணும்.
வயது 29 ஆகிவிட்டதே? காதல்... கீதல் ஏதாச்சும்?
ஹலோ... எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையே இருக்குங்க. காதல்... கீதல்னு சொன்னா வீட்டில சும்மா விடமாட்டாங்க. என ஜாலியாக விடைபெற்றார்.
- ராம்ஸ்