டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த மாதம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே பிருத்விராஜ் நடித்த 'டியான்' என்கிற படம் வெளியானது. சகோதரர்களான பிருத்விராஜும், இந்திரஜித்தும் இணைந்து நடித்திருந்ததும், நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்தப்படத்தின் கதையை எழுதி இருந்தததுடன் படத்தில் வில்லனாக நடித்திருந்ததும், வட இந்திய மாநிலங்களின் பின்னணியில் இந்தப்படம் உருவாகி இருந்ததும் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.. ஆனால் எதிர்பார்ப்பில் பாதியைக்கூட ஈடு செய்யமுடியாமல் படம் தோல்வியை தழுவியது..
இந்தநிலையில் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்துள்ள பிருத்விராஜ், “அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து உருவான இந்த கதையை வெகுஜன ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்க்க தவறிவிட்டோம். தவறு ரசிகர்கள் மீதல்ல.. எங்கள் மீதுதான்” என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, மோகன்லாலை வைத்து தான் இயக்க உள்ள 'லூசிபர்' படத்தின் கதையையும் இதே முரளிகோபி தான் எழுதுகிறார் என்பதால் அதை கமர்ஷியல் அம்சங்கள் மிஸ்ஸாகாதவாறு உருவாக்க வேண்டும் என ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தி வருகிறாராம் பிருத்விராஜ்.