‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஷாரூக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என இரண்டு படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. தற்போது இவர் கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமான கோல்மால் அகைன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கோல்மால் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் படத்தை, ரோகித் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரோகித் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் கூறியிருப்பதாவது... "ஷாரூக்கானை இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அதற்கான கதையும் எண்ணிடம் இப்போது இல்லை. எனது கவனம் எல்லாம் கோல்மால் அகைன் படத்தில் தான் உள்ளது. சமீபத்தில் ஷாரூக்கானின் ஷூட்டிங் மெகபூப் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது ஷாரூக்கை சந்தித்தேன், அதன் அடிப்படையில் இப்படியொரு செய்தி பரவியுள்ளது" என்றார்.