பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ள அஜித், அடுத்தபடியாகவும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கிறார் என்றொரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் அதை யாரும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கடந்த வியாழன் அன்று வெளியானது விவேகம் படத்தை பார்க்க வழக்கம் போலவே அஜித் ரசிகர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டனர். சில தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பேனர்களை கிழித்து எரிந்து பிரச்னை செய்தனர்.
மேலும், விவேகம் படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் வியப்பினை வெளிப்படுத்தினபோதும், விவேகம் படம் ஏ சென்டர் படமாகி விட்டது எனவும் ஒரு கருத்து வெளியாகியுள்ளது. இந்தநிலையில், அஜித்தை அடுத்தபடியாக இயக்கப்போவது யார் என்கிற பரபரப்பான சூழலும் கோலிவுட்டில் நிலவியிருக்கிறது. அந்தவகையில், அடுத்து அஜித்தை ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, ஜெயம்ராஜா ஆகிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அஜித் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.