அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பசங்க படத்தில் நடித்ததின் மூலம் புகழ்பெற்றவர் செந்தில்குமாரி. அதன் பிறகு பசங்க செந்தி என்றே அழைக்கப்பட்டார். தனது கீச்சு குரல் யதார்த்த நடிப்பால் தொடர்ந்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்தார். தற்போது மெர்சல், மதுர வீரன், சர்வர் சுந்தரம் படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சின்னத்திரை நடிகையாக மாறியிருக்கிறார் செந்தி. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் செல்லமான அம்மா மற்றும் மாமியாராக நடித்து வருகிறார்.
"இப்போதும் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் இயக்குனருக்கு போன் பண்ணி ஒரு நாள் பாராட்டினேன். அதிலிருந்து அவரும் நீங்களும் நடிங்களேன் என்ற வற்புறுத்திக் கொண்டே இருந்தார், மறுத்து வந்தேன். தொடர் வற்புறுத்தலால் நடித்துதான் பார்ப்போமே என்று நடிக்க ஆரம்பித்து விட்டேன். சின்னத்திரையில் நடிக்க ஆரம்பத்ததிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் எனக்கு சினிமாதான் முக்கியம். சரவணன் மீனாட்சிக்கு பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை" என்கிறார் செந்தி.