டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மோகன்லாலை பொறுத்தவரை ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டால் சற்றே ரிலாக்ஸ் செய்வதற்காக வெளிநாடு டூர் கிளம்பி விடுவார். இல்லையென்றால் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார். அந்தவகையில் மோகன்லால் தற்போது 'வில்லன்', 'வெளிபாடிண்டே புஸ்தகம்' என இரண்டு படங்களை முடித்துவிட்டார். அதில் லால்ஜோஸ் டைரக்சனில் உருவான 'வெளிபாடிண்டே புஸ்தகம்' படம் வரும் ஓணம் பண்டிகையன்று ரிலீஸாக இருக்கிறது..
அடுத்ததாக 'ஒடியன்' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசி பகுதிகளில் நடைபெறுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன் இந்தமுறை பக்கத்துக்கு நாடான பூடானுக்கு சின்னதாக ஒரு டூர் சென்று திரும்பியுள்ளார்.. அங்கே சற்றே ரிலாக்ஸ் ஆன மோகன்லால் தற்போது வாரணாசி திரும்பி நேற்றுமுதல் ஓடியன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.