'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
பாலிவுட்டின் மாஜி கனவுக்கன்னி மாதுரி தீட்சித். திருமணம், குழந்தை பிறப்பு என்று ஆன பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் கடைசியாக 2014-ம் ஆண்டு வெளியான குலாப் கேங் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர்.
இந்நிலையில் இப்போது சினிமாவில் தயாரிப்பாளராக களம் இறங்குகிறார். ஆர்என்எம் என்ற தனது சொந்த தயாரிப்பு மூலமாக இப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிறுவனம் இதற்கு முன்னர் மருத்துவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறது. இப்போது முதன்முறையாக சினிமாவில் களமிறங்குகிறது.
முதற்கட்டமாக மராத்தியில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக உருவாகும் இப்படத்தின் கதையை யோகேஷ் விநாயக் ஜோஷி எழுத, ஸ்வப்னாநீல் ஜெயாகர் இயக்குகிறார். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படம் தயாரிப்பது குறித்து மாதுரி தீட்சித் கூறியிருப்பதாவது.... "எங்களது ஆர்என்எம்-ன் தயாரிப்பு மூலம் புதிய தளத்தில் அடியெடுத்து வைக்க உள்ளோம். இது குடும்ப சென்ட்டிமென்ட் நிறைந்த படமாக இருக்கும். ஷூட்டிங் நாளை எண்ணி ஆவலுடன் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.