விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர் சாதனா. இப்போது மீண்டும் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் ராமின் மகளாக நடித்தவர். இந்தப் படத்தில் மம்முட்டி மகளாக நடிக்கிறார். இதுகுறித்து சாதனா கூறியதாவது:
ராம் சார்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார். அவர் எனக்கு இன்னொரு அப்பா. எனது நாட்டிய நிகழ்ச்சிக்கு வந்த ராம் சார் "பேரன்பு கதையை சாதனாவுக்காகவே எழுதினேன் அவளால் மட்டுமே அதில் நடிக்க முடியும். சாதனா என் பொண்ணு" என்றார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும். என் எதிர்காலத்தையும் ராம்சார்தான் தீர்மானிப்பார்.
தங்க மீன்கள் படம் போன்று பேரன்பு படமும் அப்பா மகள் உறவை பற்றியதுதான். அப்பா மகள் உறவை வேறு கோணத்தில் சொல்கிற படம். மம்முட்டி அங்கிளுடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். என்கிறார் சாதனா.