தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் - சிவா மூன்றாவது முறையாக இணைந்த விவேகம் படம் இன்று(ஆகஸ்ட் 24) உலகம் முழுக்க சுமார் 3000 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்தாலும் அஜித்தின் ரசிகர்கள் விவேகத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அஜித்திற்கு ரசிகர் மன்றம் என்று எதுவும் கிடையாது. அப்படியிருந்தும் அவரது ரசிகர்கள், படம் வெளியாகும் முதல்நாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இப்படி ரசிகர்கள் அஜித் மீது வெறித்தனமாக இருப்பதால் என்னவோ, அஜித்தின் படம் முதல்நாள் வெளியாகும் அன்று டிக்கெட் விலை கண்ணா பின்னா என்று விற்று வருகிறார்கள்.
இன்று வெளியாகியுள்ள விவேகம் படத்தின் டிக்கெட் விலை, அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளச்சந்தையில் அதிகாலை காட்சிகள் 500 முதல் ரூ.1500 வரை விற்கப்பட்டுள்ளது. இன்னும் சில தியேட்டர்களில் நேரடியாகவே ரூ.500, 800 என்று விற்றுள்ளார்கள். இதுதொடர்பாக சில இடங்களில் புகார்களும், மோதல்களும் நடந்துள்ளன.
அதேசமயம், அஜித் மீதுள்ள வெறி காரணமாகவும், முதல்நாள், முதல்ஷோவில் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் பலரும் விலையை பற்றி கவலை கொள்ளாமல் டிக்கெட் வாங்கி சென்றுள்ளனர்.
அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கெட் விற்கப்பட வேண்டும், ஆனால் அதையும் மீறி நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை அரசு உடனடியாக கவனிக்குமா, அதிக டிக்கெட் வாங்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பது சாமானிய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.