பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகை ஓவியாக இயற்கையிலேயே ரொம்ப அழகு என்று டைரக்டர் பாண்டிராஜ் கூறியுள்ளார். பசங்க, வம்சம் படங்களைத் தொடர்ந்து டைரக்டர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் புதிய படம் மெரினா. முழுக்க முழுக்க சென்னை கடற்கரை சிறுவர்களின் பின்னால் உள்ள கதைதான் இப்படத்தின் மொத்த களமும்.
படத்தின் நாயகனாக சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயனும், நாயகியாக நடிகை ஓவியாவும் நடித்துள்ளனர். ஓவியா பற்றி பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில், "ஓவியா பொதுவாகவே மேக்கப் பிரியை. எப்போதும் மேக்கப் மயம்தான். என் படங்களின் ஹீரோயின்களுக்கு மேக்கப் போட விடவே மாட்டேன். ஓவியா இயற்கையிலேயே அழகானவர்தான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அவர்களுக்கு மேக்கப் அவசியமில்லை. ஆனால் இந்தப் படத்துக்காக விட்டுவிட்டேன். என்று கூறியுள்ளார்.