ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேலாகவும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக முன்வரிசை நடிகர்களுடனான வாய்ப்புகள் இல்லை. அதன்காரணமாக, கதையின் நாயகியாக உருவெடுத்தார். ஆனால் டோரா எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் மறுபடியும் ஹீரோயிசம் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வத்தை திருப்பியிருக்கிறார் நயன்தாரா.
அந்த வகையில், தமிழில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாகியிருக்கிறார். இவரைப்போலவே ஸ்ரேயாவும் பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகத்தான் சமீபகாலமாக நடித்து வருகிறார். இந்தநேரத்தில் நயன்தாராவும் தெலுங்கு படங்களில் நடிக்க முழுவீச்சில் இறங்கியிருப்பதால், சீனியர் தெலுங்கு நடிகர்களின் படங்களை கைப்பற்றுவதில் இவர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இவர்களில் நயன்தாராவுக்கு ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நடித்த பிறகு ஆந்திராவில் பெண் ரசிகைகள் அதிகமாகி விட்டார்களாம். அதனால் அதை மனதில் கொண்டு அவரது கேரக்டரில் சென்ட்டிமென்ட் காட்சிகள் அதிகமாக சேர்த்து வருகிறார்களாம் தெலுங்கு டைரக்டர்கள்.