ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
'மாநகரம்' படத்தில் நடித்த சந்தீப்கிஷன், விக்ராந்த் கதாநாயகர்களாகவும் நடிக்க, சூரி காமெடி வேடத்தில் நடிக்க 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கினார் சுசீந்திரன். சமீபத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
நெஞ்சில் துணிவிருந்தால் படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, 'மெர்சல்' விஜய்யுடன் சுசீந்திரன் மோதுகிறார் என்கிற ரீதியில் செய்திகள் வெளியாகின. விஜய்யை வைத்து படம் எடுக்கும் முயற்சியில் இருக்கும் சுசீந்திரனுக்கு மெர்சலுக்கு போட்டி என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த, அதற்கு விளக்கமளித்துள்ளார்.
''எங்களுடைய நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அதனால் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா? என்று பலரும் கேட்கிறார்கள். மெர்சலை எதிர்த்து வரவில்லை, மெர்சலுடன் வருகிறோம். 2013ல் பாண்டியநாடு திரைப்படத்தை அஜித் சாரின் 'ஆரம்பம்' படத்துடன் வெளியிட்டோம். ஆரம்பம் படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது!'' என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
இந்த வருட தீபாவளிக்கு விஜய் நடித்த 'மெர்சல்' படத்துடன், 'நெஞ்சில் துணிவிருந்தால்', கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ஹர ஹர மஹாதேவகி', அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா' ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.