‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
இந்தியத் திரையுலகில் இதுவரை இப்படி ஒரு நட்சத்திரக் கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, ஏ.ஆர். ரகுமான் என படிக்கும் போதே 'சைரா - நரசிம்ம ரெட்டி' படத்தின் மெகா மகா கூட்டணியை உணர முடிகிறது.
தென்னிந்தியப் படங்களில் பலர் கேட்டும் நடிக்காத அமிதாப்பச்சன், சிரஞ்சீவியே நேரடியாக அவரிடம் சென்று படத்தின் முக்கியத்துவத்தை விளக்கி நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார். சுதீப், 'நான் ஈ' படம் மூலம் ஏற்கெனவே தெலுங்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தைப் பெற்றவர். ஜெகபதி பாபு முன்னாள் வெற்றிகரமான நாயகன், இந்நாள் வெற்றிகரமான வில்லன்.
இப்படிப்பட்ட சிறந்த சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தற்போது தமிழில் தனி அடையாளம் கொண்ட நடிகராக விஜய் சேதுபதிக்குக் கிடைத்திருப்பது பலரையும் பொறாமைப்பட வைத்திருக்கும். இது விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவரை இந்திய அளவில், உலக அளவில் கொண்டு சேர்க்கலாம்.
வசூல் படங்களில் நடித்து பெயர் வாங்குவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இப்படிப்பட்ட சிறந்த படங்களில் நடித்து வாங்கும் பெயர்தான் நிலைத்து நிற்கும். அது விஜய் சேதுபதிக்குத் தொடர்ந்து கிடைக்கலாம்.