'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி |
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, ஆர்யா நடிக்க உள்ள 'சங்கமித்ரா' சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவது மேலும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமாகி கேன்ஸ் வரை சென்று ஆரம்ப விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அதன் பின் திடீரென படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதைப் பெரிதுபடுத்தாமல் அவருக்குப் பதிலாக வேறு யாரை நடிக்க வைப்பது என்ற தேர்வில் படக்குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், இன்னும் பொருத்தமான நாயகி கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
நயன்தாரா மாதிரியான முன்னணி ஹீரோயின்கள் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று அவரிடமும் பேசினார்களாம். ஆனால், அவர் படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்ல என்கிறார்கள். அதே சமயம் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க 'சைரா நரசிம்மரெட்டி' படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதோடு பாலகிருஷ்ணாவுடனும் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் நடிக்க நயன்தாராவுக்கு மிக அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
'சங்கமித்ரா' என்பது படத்தின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் அதற்குப் பொருத்தமாக யார் அமையப் போகிறார்களோ ?. அப்படி ஒரு நாயகி கிடைத்தாலும், அரங்கு அமைக்கும் வேலைகளால், படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான் ஆரம்பமாக வாய்ப்புள்ளது. அதற்குள் சுந்தர் .சி 'கலகலப்பு 2' படத்தை இயக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ஓவியா இரண்டாம் பாகத்திலும் நடித்தால் படம் பூஜை போட்ட அன்றே வியாபாரம் ஆகிவிடும்.