அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ஸ்பைடர். செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை இதற்கு முன்பு தான் இயக்கிய ரமணா, கத்தி படங்கள் வரிசையில் ஒரு சமூக நோக்கமுள்ள கதையில் இயக்கியிருக்கிறார் முருகதாஸ். ஊழல் அதனால் ஏற்படும் பேரழிவுகள் சம்பந்தப்பட்ட இந்த கதையில் மகேஷ்பாபு, உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் பற்றி முருகதாஸ் கூறுகையில், சர்வதேச பிரச்னை கொண்ட இந்த கதையில் ஒரு பிரபல வில்லனை தான் நடிக்க வைக்க வேண்டும். ஆனால், இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தற்கு எஸ்.ஜே.சூர்யாதான் சூட்டாக இருந்தார். கதைப்படி அவர் ஒரு கொரில்லா வில்லன். அவர் எப்போது எங்கிருந்து தாக்குகிறார் என்பதை சொல்லவே முடியாது. அந்தவகையில், அவரது பர்பாமென்ஸ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அணுகுமுறையை கொடுக்கும்.
ஸ்பைடர் நாயகன் மகேஷ்பாபு, இயக்குனர்களின் நடிகராக இருக்கிறார். டைரக்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நடிக்கிறார். அதோடு, ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில்லை. ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்கிறார். இதனால் அந்த படம் முடிகிறவரை அந்த கதாபாத்திரமாக காணப்படுகிறார். இது இயக்குனர்களுக்கு ரொம்ப உதவியாக உள்ளது.
அதோடு, ஸ்பைடர் படத்திற்கு 80 நாட்கள் கால்சீட் கொடுத்தார். இரண்டு மொழி படம் என்பதால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து காட்சிகளை அடுத்தடுத்து படமாக்கியபோதும் சோர்வை காட்டாமல் சுறுசுறுப்பாக நடித்துக் கொடுத்தார். மகேஷ்பாபு கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகத்தான் ஸ்பைடர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்தது என்கிறார்.
இதன்பிறகு விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கும் முருகதாசுக்கு, ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நான் ரஜினியின் தீவிரமான ரசிகன் என்பதால் அவர் மனதில் கொண்டு கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அதோடு, அவர் சொன்னால் ஒரே மாத்தில் புதிய கதை ரெடி பண்ணவும் தயாராக இருக்கிறேன். அதனால் விரைவில் ரஜினியை சந்தித்து பட விசயமாக பேச முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.