‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு அதையே மையாக வைத்து பல படங்கள் தயாராகி வருகிறது. குறிப்பாக அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சந்தனதேவன். விஜயகாந்த் மகன் நடிக்கும் மதுர வீரன், அருவா சண்டை. ஜல்லிக்கட்டு, மாடு என் தெய்வம் என நிறைய படங்கள் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் இன்னொரு படம் வீரத்திருவிழா. இறைவன் சினி கிரியேஷன் சார்பில் சி.செல்வகுமார் தயாரிக்கிறார். சத்யா, செல்வம், தேனிகா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்வண்ணன், சிந்தியா, நசீர், காதல் சுகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஈ.எஸ்.ராமு இசை அமைக்கிறார், ஹார்மூக் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் விஜய்முரளிதரன் என்கிற வைரமணி கூறியதாவது:
இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான் ஜல்லிக்கட்டு. 5 இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
ஊர் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வீரத்திருவிழா உருவாகி உள்ளது. காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல், நேமம் மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.