பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மாப்பிள்ளை படங்களில் நடித்தவர் மனீஷா கொய்ராலா, 50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது டியர் மாயா, படத்தில் நடித்து வருகிறார். கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனீஷா அதிலிருந்து மீண்டு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
மனீஷா ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் என்ற அமைப்பில் இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார். பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் ஏற்படுத்தி கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்.
ஒரு பெரிய நடிகை, அதுவும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் மக்களோடு மக்களாக பணியாற்றுவதை நேபாள மக்கள் ஆச்சர்யத்தோடு கவனிக்கிறார்கள். நேபாளம் மனீஷா பிறந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.