சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் விழாக்களில் எதையாவது பேசி கைதட்டல் வாங்க வேண்டும் அல்லது மீடியா செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பது சிலருக்கு பேராசையாக இருக்கும். அதனால், பொருத்தமில்லாத பல விஷயங்களை அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் பார்த்திபன். 'மெர்சல்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குவதற்காக விஜய்யை 'சிஎம்' என்றெல்லாம் சொல்லி மகிழ்ந்தார்.
பார்த்திபனைப் போலவே கொஞ்ச நாட்கள் முன் இரு புதுமுக ஹீரோயின்களைப் பற்றி இருவர் மேடையில் சொல்லி மகிழ்ந்தனர். 'வனமகன்' நிகழ்ச்சி ஒன்றில் அப்படத்தின் அறிமுக நாயகி சாயிஷாவை அடுத்த சிம்ரன் இவர்தான் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அதே போல 'ரங்கூன்' பட நிகழ்ச்சி ஒன்றில் அப்படத்தின் அறிமுக நாயகி சனா மக்பூல்-ஐ அடுத்த சிம்ரன் இவர்தான் என படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். ஆனால், இரண்டு படங்களுமே மிகச் சுமாரான வெற்றியையும், வரவேற்பையுமே பெற்றன. அதனால், அந்தந்தப் படங்களின் ஹீரோயின்களான சாயிஷா, சனா மக்பூலை தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கண்டு கொள்ளவில்லை.
சாயிஷாவுக்கு 'வனமகன்' பட வெளியீட்டிற்கு முன்னதாகக் கிடைத்த வாய்ப்பான 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படமும் கைவிடப்பட்டுவிட்டது. சனா மக்பூலுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கூடக் கிடைக்கவில்லை. உண்மையில் சாயிஷா, சனா இருவருமே அழகான நடிகைகள்தான். ஆனால், படம் வெளிவருவதற்கு முன்பாகவே அவர்களை அடுத்த சிம்ரன் என சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் சொன்னதுதான் ஓவராகப் போய்விட்டது. இருவருமே அடுத்த தமிழ்ப் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். இனிமேலாவது, விழாக்களில், நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது.