தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வெள்ளி முதல் சின்னத்திரையில் மோகன்லால் பங்கெடுக்கும் 'லால் சலாம்' என்கிற நிகழ்ச்சி வாரத்தில் இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகின்றது.. இந்த நிகழ்ச்சியில் அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்களது நேர்மையும் கடின உழைப்பும் மோகன்லாலால் கௌரவப்படுத்தப்படுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்தவகையில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆட்டோ தொழிலாளர்களில் பலரை அழைத்து கௌரவித்தார் மோகன்லால்..
ஆட்டோ தொழிலாளர்கள் தொடர்பான எபிசோட் என்பதாலோ என்னவோ, மோகன்லால் நடித்த பழைய படமான 'ஏய் ஆட்டோ' படத்தில் இடம்பெற்ற சில நடிகர்களும் இதில் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை வெளியிட்டனர். அப்போது மோகன்லாலின் ஆரம்பகால நண்பரும் நடிகர், தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூ என்பவர் மோகன்லாலுடனான பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில், மோகன்லால் நடித்த படம் ஒன்றின் புரொடக்சன் மேனேஜரை ஏதோ பெண் விவகாரத்தில் தொடர்புபடுத்தி, ஆறேழு பேர் ஒன்றாக சேர்ந்து தாக்க ஆரம்பித்து விட்டார்களாம். தயாரிப்பாளரும் இயக்குனரும் தடுத்தும் அவர்கள் நிறுத்துவதாக இல்லை. அந்த நேரத்தில் வேறு பகுதியில் இருந்த மோகன்லால் இந்த தகவல் கேள்விப்பட்டு ஓடிவந்து, ஒரே ஆளாக அவர்கள் அனைவரையும் அடித்து துரத்தினாராம். இந்த அனுபவத்தை கூறிய மணியம்பிள்ள ராஜூ, “பாவம் அவர்களுக்கு மோகன்லால் ஒரு ரெஸ்லிங் சாம்பியன் என்பது தெரியாமல் போய்விட்டது” என மோகன்லால் ஒரு ரெஸ்லர் என்கிற விபரத்தையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.