தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெரினா படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் "மெரினா" கடற்கரை காந்தி சிலை அருகே காலை 7 மணிக்கு நடைபெற்ற போது கலந்து கொண்டார் அதில் ஹீரோவாக அறிமுகமாகும் டி.வி.,காம்பியரர் சிவகார்த்திகேயன்! ஆனால் அது சம்பந்தமாக மறுநாள் பிரசாத் லேபில் நடந்த பிரஸ் மீட்டிற்கு மட்டம் போட்டுவிட்டார் மனிதர்!
இதுபற்றி இயக்குநர் "பசங்க" பாண்டிராஜிடம் கேட்டபோது., அவருக்கு வேறு ஒரு படம் இன்று ஷூட்டிங் இருப்பதால் இங்கு கலந்துக்க முடியலை., சிவகார்த்திகேயனுக்கு 2012க்குள் ஒரு 500 படத்திலாவது ஹீரோவாக நடித்துவிட வேண்டுமென்ற ஆசை! அதான்., இங்க ஆப்செண்ட் என்று கிண்டலடித்தவர். அதே மாதிரி மெரினா பீச்சில் ஆடியோ ரிலீஸ் வைபவத்தின்போது மொத்த படக்குழுவும் மெரினாவை சுத்தப்படுத்தும் நோக்கில் இறஙகி குப்பையை பொறுக்கி சேகரித்து குப்பை தொட்டியில் போட்டோம்., ஆனால் , ஹீரோவும், ஹீரோயினும் அப்படி ஒரு ஃபோட்டோவிற்கு கூட போஸ் கொடுக்கவில்லை சாமர்த்தியமாக எஸ்கேப் ஆகிவிட்டனர் என்றார்.
அருகில் இருந்த நாயகி ஓவியா., இயக்குநர் பாண்டிராஜின் பேச்சு புரிந்தும் புரியாதது மாதிரி சிரித்துக்கொண்டே மீண்டும் "எஸ்" ஆனார்! அடப்பாவிகளா!!