கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்த அஞ்சலி, அதன்பிறகு வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு மூலம் பிரபலமானார். தற்போது ஜெய்யுடன் பலூன் படத்தில் நடித்திருப்பவர், ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் பேரன்பு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தரமணி படத்தில் ஆண்ட்ரியா லீடு ரோலில் நடிக்க, ஒரு கெஸ்ட் ரோலில் அஞ்சலி நடித்திருந்தார். இதுபற்றி டைரக்டர் ராம் கூறுகையில், அஞ்சலி எனது படத்தில் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மிகச்சிறப்பாக நடித்தார். அதனால் அவரை லீடு ரோலில் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதோடு, தரமணி படத்தில் அவர் நடித்தால் வியாபார ரீதியாக பயனாக இருக்கும் என்று அவரிடம் கேட்டேன். துளியும் யோசிக்காமல் வந்து நடித்துக் கொடுத்தார். இப்போது பேரன்பு படத்தில் ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறார். கடினமான காட்சியில் கூட எளிதாக நடித்து விடும் அஞ்சலியை இந்த படம் பெரிதாக பேச வைக்கும். இந்த படத்தையடுத்து ஏற்கனவே அவருக்காக நான் யோசித்து வைத்திருக்கும் கதையில், கதையின் நாயகியாக அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் ராம்.