'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது நிவின்பாலி மலையாளத்தில் 'ஹே ஜூட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் த்ரிஷா. இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மலையாள பத்திரிகை ஒன்றில், சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற தங்களது புகைப்படக்காரருடன் நிவின்பாலி சண்டையிட்டு வாக்குவாதம் செய்ததுடன் திமிராக நடந்து கொண்டார் என செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து நிவின்பாலி இன்னும் எதுவும் கூறாத நிலையில், படத்தின் இயக்குனர் ஷ்யாம் பிரசாத் தனது சோஷியல் மீடியா பக்கம் மூலமாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்..
“படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நிவின்பாலியின் புகைப்படங்களை எடுக்க நான் அனுமதி தந்ததாக சொல்வதில் உண்மையும் இல்லை. அப்படியே நான் அனுமதித்திருந்தாலும், நிவின்பாலியை புகைப்படம் எடுக்க அவரது அனுமதி பெறவேண்டும் அல்லவா..? படத்தின் முக்கியமான காட்சிக்கான உடைகளுடன் இருக்கும் அவரை புகைப்படம் எடுக்க அவர் எப்படி ஒப்புக்கொள்வார்..? இதனால் நிவின்பாலி திமிராக நடந்துகொண்டார் என சம்பந்தப்பட்ட பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் ஷ்யாம் பிரசாத்.