டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவரது கணவர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா ஒரு நிருபர் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அலுரி சக்ரபாணி என்ற ஒரு கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார்.
அதாவது, சாவித்ரி லீடு ரோல்களில் நடித்து புகழ்பெற்ற படங்களான மாயா பஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் தான் கதை எழுதியுள்ளார். அதோடு, இந்த படங்களை தயாரித்த நாகிரெட்டியின் விஜயா கம்பைன்சில் இவரும் ஒரு பங்குதாரராம். அந்தவகையில், சாவித்ரியின் கேரியரில் அலுரி சக்ரபாணி கதை எழுதிய படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் அலுரி சக்ரபாணி கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.